வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பருவ நிலை மாற்றத்தால் பறவைகள் வரத்து குறைவு

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இந்தாண்டு பருவ நிலை மாற்றத்தால் பறவைகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பருவ நிலை மாற்றத்தால் பறவைகள் வரத்து குறைவு
Published on
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இந்தாண்டு பருவ நிலை மாற்றத்தால் பறவைகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதங்களில், இந்தோனேசியா, இலங்கை, பாகிஸ்தான், பர்மா என பல்வேறு பகுதிகளில் இருந்து, சுமார் 25 ஆயிரம் பறவைகள் வரை வந்திருக்கும். ஆனால் இந்தாண்டு பருவ நிலை மாற்றத்தால், 3 ஆயிரத்திற்கும் குறைவான பறவைகளே வந்துள்ளதாக தெரிகிறது. இதனால், பல்வேறு நாடுகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
X

Thanthi TV
www.thanthitv.com