பாரில் சரக்கடிக்க மதுப்பிரியருக்கு தலையில் கொட்டிய ரத்தம்

மானாமதுரையில் மது குடிக்க சென்ற இடத்தில் பார் ஊழியர் தாக்கியதில் மது பிரியர் பலத்த காயமடைந்துள்ளார். கண்ணன் என்பவர் நண்பர்களுடன் பீர் வாங்கி குடித்த நிலையில், அதே வகை பீர் மீண்டும் கேட்டுள்ளார். ஆனால், வேறு வகை பீர் தான் உள்ளது என்று ஊழியர்கள் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் வீடியோ எடுக்க முயன்றதால், பார் ஊழியர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதில், தலையில் பலத்த காயமடைந்த கண்ணனை அவரது நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com