சில்லரை என கூறி உப்பு மூட்டையை கொடுத்து சென்ற நபர்

சிசிடிவி காட்சிகள் மூலம் மர்ம நபரை தேடும் உரிமையாளர்
சில்லரை என கூறி உப்பு மூட்டையை கொடுத்து சென்ற நபர்
Published on
மணப்பாறையில் 18 ஆயிரம் ரூபாய்க்கு சில்லரை இருப்பதாக கூறி மர்ம நபர் உப்பு மூட்டையை கொடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே சாலையில் ரஹ்மான் என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். 18 ஆயிரம் ரூபாய் சில்லரை இருப்பதாக ஒருவர் கூறியதை அடுத்து அவரது கடை ஊழியர் சிவா 18 ஆயிரம் பணத்தை கொடுத்து மர்ம நபரிடம் மூட்டையை வாங்கி வைத்துள்ளார்.இன்று சில்லரை தேவைப்பட்டதால் மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் உப்பு பாக்கெட்டுகள்இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக கடையில் பதிவான சிசிடிவி காட்சிகள் மூலம் மர்ம நபர்களை உரிமையாளர் தேடி வருகிறார்.
X

Thanthi TV
www.thanthitv.com