தட்டிக்கேட்ட அதிமுக நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல்
சென்னை பல்லாவரத்தில் கஞ்சா அடித்ததை தட்டிக்கேட்டவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பி.வி. வைத்தியலிங்கம் சாலையில் கஞ்சா போதையில் இருந்த 3 இளைஞர்கள் அதிமுக நிர்வாகியான பாலசுப்பிரமணியன் என்பவரின் மகள் மீது இருசக்கர வாகனத்தில் இடித்துள்ளனர். இது குறித்து தட்டிக்கேட்ட சென்ற பாலசுப்பிரமணியனை கஞ்சா புகைத்து கொண்டிருந்த 3 இளைஞர்களும் சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர், படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியனை மீட்ட பொதுமக்கள், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக ஒரு இளைஞளை பிடித்த போலீசார், மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
Next Story