மது பாட்டிலுடன் சைடுடிஷாக வந்த விஷ பூச்சி...``தெரியாம நாங்க சாப்பிட்டோம்'' | ThanthiTV

மது பாட்டிலுடன் சைடுடிஷாக வந்த விஷ பூச்சி...``தெரியாம நாங்க சாப்பிட்டோம்'' | ThanthiTV
Published on

பென்னாகரம் அருகே டாஸ்மாக்கில் வாங்கிய மதுபான பாட்டிலில், விஷப்பூச்சி கிடந்ததாக இளைஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் ஜக்கம்பட்டியிலுள்ள டாஸ்மாக் கடையில், மூன்று இளைஞர்கள் மது வாங்கி அருந்தி உள்ளனர். இந்தநிலையில் அவர்கள் வாங்கிய மது பாட்டிலுக்குள், விஷ பூச்சி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. மேலும், மது அருந்திய ஒருவருக்கு வாந்தி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து 3 இளைஞர்களும், ஜக்கம்பட்டி டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com