சாலையின் குறுக்கே பழுதாகி நின்ற லாரி சென்னை - பெங்களூரு சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்

x

காஞ்சிபுரம் அருகே வேடல் பகுதியில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மூன்று நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது...

இதுதொடர்பான கூடுதல் தகவல்களை செய்தியாளர் தன்ராஜிடம் கேட்கலாம்...

காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேடல் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல்.

5 கிலோமீட்டருக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதி.

கடந்த மூன்று மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் ஏராளமான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அணிவகுத்து காத்துக் கிடக்கின்றன.

போக்குவரத்து நெரிசல் குறித்து தகவல் அறிந்து காஞ்சிபுரம் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இருப்பினும் பல மணி நேரமாக தொழிலாளர்களை ஏற்றுச் சென்ற தொழிற்சாலை வாகனங்களும் காத்துக் கிடப்பதால், வாகன ஓட்டிகள், பயணிகள், தொழிலாளர்கள், என அனைத்து தரப்பினரும் வேதனை அடைந்து உள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்