பெரம்பலூரில் குரங்கை துன்புறுத்திய 3 பேருக்கு ரூ.50,000 அபராதம்
பெரம்பலூரில் குரங்கை துன்புறுத்திய 3 பேருக்கு ரூ.50,000 அபராதம்
பெரம்பலூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் குரங்கை துன்புறுத்திய 3 பேருக்கு வனத்துறை 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
பெரம்பலூர் கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் குரங்குகள் தொல்லை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குரங்குகளை பிடிக்க கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. குரங்குகளை பிடிக்க வந்த இருவர், அவற்றை துன்புறுத்திய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
