சட்டவிரோத மணல் விற்பனை - கையில் எடுத்த உச்சநீதிமன்றம்

x

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் வரும் 23-ம் தேதி விசாரிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தது. மேலும், உரிமங்கள் தொடர்பான விவரங்களுடன் ஆஜராக

அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில், சம்மனுக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது நாளை மறுதினம் விசாரணை நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்