இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லுமா?... பிசிசிஐ புதிய தலைவர் விளக்கம்

x

பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்வது குறித்த முடிவை பிசிசிஐயால் எடுக்க முடியாது என, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள ரோஜர் பின்னி, வேறு நாடுகளுக்கு இந்திய அணி செல்வதற்கோ, பிற நாடுகள் இந்தியா வருவதற்கோ மத்திய அரசுதான் முடிவெடுக்க முடியும் என்று ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசை மீறி தன்னிச்சையாக முடிவெடுக்க பிசிசிஐக்கு அதிகாரம் இல்லை எனவும் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.

முன்னதாக அடுத்த ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறாது என, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்