நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் : அ.தி.மு.க. வுக்கு ஆதரவு அளிக்க ச.ம.க. முடிவு

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் : அ.தி.மு.க. வுக்கு ஆதரவு அளிக்க ச.ம.க. முடிவு
Published on

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சந்தித்து, இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க கோரியதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில், அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு அளிப்பது என்றும், தேர்தல் பணிக்குழு விபரமும், பிரச்சார தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சரத்குமார் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com