மேகதாது அணை விவகாரத்தை தமிழக அரசு அழுத்தமாக எதிர்கொள்ள வேண்டும் - சரத்குமார்

மேகதாது அணை விவகாரத்தை தமிழக அரசு அழுத்தமாக எதிர்கொள்ள வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை விவகாரத்தை தமிழக அரசு அழுத்தமாக எதிர்கொள்ள வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் நிவாரண பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று கூறினார். புயல் பாதிப்புகளை பிரதமர் பார்வையிடாதது, மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லையோ என்ற ஐயத்தை ஏற்படுத்துவதாகவும் சரத்குமார் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com