"இந்த‌த் தேர்தலில் வெற்றி பெற்றால்.. இதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும்.." - உறுதி அளித்த பொன்.ராதாகிருஷ்ணன்

x

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவிலில் உள்ள அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, அவருடன் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். பின்னர், அங்கு வந்த பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீனவர்களுக்கான பிரச்சினைகள், கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த‌த் தேர்தலில் வெற்றி பெற்றால், குறும்பாலை, வாணியக்குடி பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்றும், ஹெலிகாப்டர் தளம், ஆம்புலன்ஸ் வசதி கொண்ட கப்பல் போன்றவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்