"மலர், மாலைகள் பொன்னாடை வேண்டாம்" - தொண்டர்களுக்கு கமல் வேண்டுகோள்

மலர் மாலைகள், பொன்னாடை தனக்கு அணிவிக்க வேண்டாம் என மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

"மக்கள் நீதி மய்யத்தின் இது நம்மவர் படை பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. தொண்டர்கள் முன்னிலையில் இசை தகடு வெளியிடப்பட்டதை தொடர்ந்து கமல் பேசினார். அப்போது எப்படி ஜெயிக்கப்போகிறாய் என அனைவரும் தம்மிடம் அனைவரும் கேட்பதாக தெரிவித்த கமல், நஷ்டம் ஏற்பட்டாலும் வெல்வேன் என்று குறிப்பிட்டார். மலர் மாலை, பொன்னாடை அணிவிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

நல்லவர்கள் எங்கே இருப்பார்கள்.. ? அரசியலில் வெற்றி பெறுவது எப்படி? - கமல்ஹாசன் விளக்கம்

X

Thanthi TV
www.thanthitv.com