கோவில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி நாளை உண்ணாவிரதம் - ஹெச்.ராஜா

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு எந்த வித கட்டுப்பாடும் விதிக்க கூடாது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே. நகர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் அவர், கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜா, கோவில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும் நாளை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com