கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானையை, 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் உயிருடன் மீட்டனர். கிணற்றில் இருந்து வெளியே வந்த யானை உடனடியாக வனப்பகுதியை நோக்கி ஓடியது.