உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில், குழந்தைகள் நலத்துறை பெண் அதிகாரியை, மாணவர்கள் நாற்காலியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதி மேலாளர் மீதான முறைகேடு புகார் குறித்து விசாரிக்க சென்ற போது, மம்தா துபே மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இந்த சம்பவம் உத்தரப்பிரதேச அரசு ஊழியர்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.