இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (29.07.2025) | 7 PM Headlines | ThanthiTV
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் பிரதமர் மோடி உரை...
இந்த கூட்டத்தொடர் நாட்டின் பெருமையை பறைசாற்றும் வெற்றிக் கொண்டாட்டம் என்று நெகிழ்ச்சி...
நாட்டில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு...
தீவிரவாதிகளின் கனவில் கூட நினைத்து பார்க்காத வகையில் இந்தியாவின் பதிலடி இருந்தததாக பேச்சு...
பாகிஸ்தானில் இருந்த தீவிரவாத முகாம்களை 22 நிமிடங்களில் இந்திய ராணுவம் அழித்ததாக பிரதமர் மோடி பெருமிதம்...
பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டல் விடுத்தும், அவர்களது கனவு பலிக்காது என்பதை நமது ராணுவம் தெளிவு படுத்தியதாக நெகிழ்ச்சி...
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு, 3 நாடுகள் மட்டுமே பாகிஸ்தானின் பக்கம் நின்றன....
190 நாடுகள் இந்தியாவின் நிலைப்பட்டிற்கு ஆதரவு அளிததாதாக பிரதமர் மோடி பேச்சு...
இந்தியாவின் தாக்குதல் ஆக்ரோஷமாக இருக்கும் என பாகிஸ்தான் நினைத்துப் பார்க்கவில்லை...
தயவு செய்து தாக்குதலை நிறுத்துங்கள் என்று பாகிஸ்தான் கெஞ்சியதாக பிரதமர் மோடி பேச்சு...
பஹல்காம் தாக்குதல் நடந்த உடனே, என்னை குற்றம் சாட்டுவதிலேயே எதிர்க்கட்சிகள் குறியாக இருந்தன...
பஹல்காம் தாக்குதலை அரசியலாக்கி மக்களிடையே ஆதாயம் தேட விரும்பினார்கள் என்றும் பிரதமர் மோடி வேதனை...
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடியவில்லை என பிரதமர் மோடி திட்டவட்டம்...
இந்தியாவை தாக்க நினைத்தால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் உறுதி...
பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதல் கொடூரமான தாக்குதல் மட்டுமின்றி இரக்கமற்ற தாக்குதல்...
மக்களவையில், ஆப்ரேஷன் சிந்தூர் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சு...
பாகிஸ்தான் அரசால் தெளிவாக ஒருங்கிணைக்கப்பட்டு இந்த தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு...
அவையில் உள்ள ஒவ்வொருவரும், பாகிஸ்தானை கண்டிப்பதாகவும் உறுதி...
அப்ரேஷன் சிந்தூர் தொடங்கும் முன்பும், தொடங்கிய பிறகும், எதிர்க்கட்சிகள் துணை நிற்கும் என உறுதி அளித்தோம்...
எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நின்றதில் பெருமைப்படுகிறோம் என்றும் ராகுல்காந்தி நெகிழ்ச்சி...
சண்டை நிறுத்தத்தை இந்தியா செய்யவில்லை, எந்த விமானத்தையும் இழக்கவில்லை என பிரதமர் மோதி இந்த அவையில் சொல்லட்டும்...
இந்திரா காந்தியின் துணிச்சலில் 50 சதவீத துணிச்சலாவது இருந்தால் சொல்லுமாறு ராகுல்காந்தி சவால்...
