பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்

தமிழகம் முழுவதும் உள்ள 509 கல்லூரிகளில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 129 இடங்களில் சேருவதற்கு ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்
Published on
தமிழகம் முழுவதும் உள்ள 509 கல்லூரிகளில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 129 இடங்களில் சேருவதற்கு ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில், ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே ரேண்டம் எண்கள் வெளியிடப்பட்டன. அவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று வெளியிட்டார். கீர்த்தனா ரவி, ரித்விக், வர்ஷினி உள்பட 10 மாணவர்கள் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்று, முதல் பத்து இடத்தை பிடித்திருப்பதாக அமைச்சர் அறிவித்தார்.வெளியிடப்பட்ட தரவரிசைப்பட்டியலில் பிழைகள் இருந்தால், ஒரு வாரத்திற்குள் திருத்திக் கொள்ள வேண்டும் எனவும் மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
X

Thanthi TV
www.thanthitv.com