தந்தையின் உயிரைக் காக்க போராட்டம் : உதவி கேட்ட 12 வயது சிறுவன்... உதவிய இந்திய இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர்

தந்தையின் உயிரைக் காக்க போராட்டம் : உதவி கேட்ட 12 வயது சிறுவன்... உதவிய இந்திய இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர்
தந்தையின் உயிரைக் காக்க போராட்டம் : உதவி கேட்ட 12 வயது சிறுவன்... உதவிய இந்திய இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர்
Published on

தந்தையின் உயிரைக் காக்க போராட்டம் : உதவி கேட்ட 12 வயது சிறுவன்... உதவிய இந்திய இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர்

டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல் மருத்துவமனையில் தனது தந்தைக்கு 12 வயது சிறுவன் ஒருவன் ஆக்சிஜன் படுக்கை கேட்டு காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து அச்சிறுவன் சிவம் தெரிவிக்கையில், மருத்துவர்களிடமும் பொதுமக்களிடமும் உதவி கேட்டுப் போராடி வந்தார். இந்நிலையில், இது குறித்து தகவலறிந்த அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர், அச்சிறுவனின் தந்தைக்கு உதவும் விதமாக ஆக்சிஜன் சிலிண்டருடன் வருகை புரிந்தனர். மேலும், சிறுவன் சிவத்தின் தந்தையை மருத்துவமனையில் சேர்க்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com