இந்து, முஸ்லீம் இணைந்து நடத்தும் 'ராமலீலா' நாடகம்

உத்தரப்பிரதேசத்தில் மூன்று தலைமுறைகளாக நவராத்திரியின் போது 'ராமலீலா' நாடகத்தை முஸ்லீம் குடும்பத்தினர் நடத்தி வருகிறது
இந்து, முஸ்லீம் இணைந்து நடத்தும் 'ராமலீலா' நாடகம்
Published on

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் முகமது ஷபீர் கான், இவர் தமது மகன் மற்றும் பேரக் குழந்தைகளுடன் இணைந்து, கடந்த மூன்று தலைமுறைகளாக ராம அவதாரத்தின் சிறப்புகளைக் கூறும் நாடகத்தை நடத்தி வருகிறார். முஸ்லீமான இவர், இந்துக் கடவுளின் சிறப்புகளைக் கூறுவது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 1972-ம் ஆண்டு முதல் இந்த முஸ்லீம் குடும்பம், இந்த நாடகத்தை நடத்தி வருகிறது. ஷபீர் கானின் இரண்டு மகன்கள் மற்றும் பேரன்கள் வரை இந்த நாடகத்தில் கலந்துகொண்டு வருகின்றனர். ஷபீருக்கு, 13 வயது இருக்கும்போதே ராமலீலா நாடகத்தில் நடிக்கத் தொடங்கிவிட்ட்டார்.

இந்து, முஸ்லிம் என அனைவரும் இணைந்து தான் இந்த நாடகத்தில் நடிக்கின்றனர். இந்து, முஸ்லிம் என யாரையும் தனியாக, கடவுள் பிரிக்கவில்லை நாம் அனைவரும் ஒன்றே என்று, ஷபீர் கான் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com