"2 பங்களா, ஏக்கர் கணக்கில் நிலம், மாதம் 1.5 லட்சம் வருமானம்.." மிரள வைத்த யாசகர் லேடி கொத்தாக பிடித்த போலீஸ் - பரபரப்பு பின்னணி

x

மத்தியப்பிரதேசத்தில் யாசகம் பெற்று மாதம் ஒன்றரை லட்சம் சம்பாதித்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்தூரில் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் முயற்சியில் மாநகராட்சியுடன் சமூக அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், இந்திராபாய் என்ற பெண்மணி, 7 வயது குழந்தையுடன் பிச்சையெடுத்தபோது, அவரிடம் சமூக அமைப்பை சேர்ந்த ஊழியர் விசாரித்தார். அப்போது, வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், புகாரின்பேரில் அப்பெண்ணை போலீசார் கைது செய்தனர். பட்டினி கிடப்பதற்கு பதில் பிச்சையெடுப்பதாகவும், திருடுவதைவிட பிச்சையெடுப்பது மேல்தான் என்றும் அந்தப் பெண் கூறியுள்ளார். அப்பெண்ணுக்கு 2 மாடி வீடும், விவசாய நிலமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்