Kerala | Tiger | கூண்டில் சிக்கியும் அடங்காத புலி | 3 மாத ஆட்டத்துக்கு முடிவு
Kerala | Tiger | கூண்டில் சிக்கியும் அடங்காத புலி | 3 மாத ஆட்டத்துக்கு முடிவு #kerala #tiger #rescue #forest #thanthitv கேரளா - வனத்துறையினரின் கூண்டில் சிக்கிய புலி மூணார் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த புலி பிடிபட்டது கேரள மாநிலம் மூணார் அருகே, கடந்த மூன்று மாதங்களாகப் பொதுமக்களையும் கால்நடைகளையும் அச்சுறுத்தி வந்த புலி, வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது. பாம்பன்மலை பகுதியில் பசுக்களை புலி ஒன்று தொடர்ந்து வேட்டையாடி வந்தது. இந்தப் புலியைப் பிடிக்க வனத்துறையினர் பசு வேட்டையாடப்பட்ட இடத்திலேயே கூண்டு வைத்தனர். இந்நிலையில் வனத்துறையினர் வைத்த கூண்டில் புலி சிக்கியது. பிடிபட்ட புலிக்கு மருத்துவப் பரிசோதனைகள் முடிந்தவுடன், அது அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். புலி பிடிபட்டு இருப்பதால் அப்பகுதி மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்."
