இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஹரிவராசனம் என்ற பெயரில் சபரிமலை சன்னிதானத்தில் விருது வழங்கப்பட்டு வருகிறது. கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து இந்த விருதுக்கு இசையமைப்பாளர் இளையராஜா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், 2020-ஆம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. சபரிமலை சன்னிதானத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெற்ர இதற்கான விழாவில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணமும், 'Worshipful Music Genius' என்ற பட்டமும் இலையராஜாவுக்கு வழங்கப்பட்டது.