விடுதியை சூழ்ந்த வெள்ளம்- 45 மாணவர்கள் படகு மூலம் மீட்பு

x

ஜம்முவில் உள்ள ஐ.ஐ.ஐ.எம் மருத்துவக் கல்வி நிறுவனத்தில் விடுதியை வெள்ளம் சூழ்ந்த‌தால், சிக்கித் தவித்த 45 மாணவர்களை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

தொடர்ந்து பெய்து வந்த கனமழையால், கனால் சாலையில் உள்ள அந்த விடுதியின் தரைத் தளங்களுக்குள் தண்ணீர் புகுந்தன. இதனால், விடுதிக்குள் இருந்த மாணவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களை மாநில பேரிடர் மீட்புப் படையினர், படகுகளில் மீட்டு பாதுகாப்பான இடத்த்திற்கு அழைத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்