புனித வளனார் பள்ளியில் 150வது ஆண்டு விழா : மகிழ்ச்சி கடலில் திளைக்கும் முன்னாள் மாணவர்கள்

கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள புனித வளனார் பள்ளியின் 150வது ஆண்டு விழாவில் முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடி உலக சாதனைகளை நிகழ்த்தி உள்ளனர்.
புனித வளனார் பள்ளியில் 150வது ஆண்டு விழா : மகிழ்ச்சி கடலில் திளைக்கும் முன்னாள் மாணவர்கள்
Published on
கடலூரில் 1868 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் அருள்நாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் 1942 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் முதல் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பயின்ற மாணவர்கள் குவிந்தனர். இப்பள்ளியில் 5,152 பேர் ஒன்றிணைந்து புதிய சாதனையை படைத்துள்ளனர். அதேப்போன்று ஓரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் தங்களது செல்லிடப்பேசியில் விளக்கினை ஒளிரச் செய்து சாதனை படைத்தனர். இந்த நிகழ்ச்சியை முன்னாள் மாணவர்கள் இணைந்து சமூக வலைத்தளங்கள் மூலம் மட்டுமே ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடதக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com