தகராறில் ஈடுபடுவோர் மீது பெப்பர் ஸ்பிரே - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மது அருந்தியவர்கள் மீது பெப்பர் ஸ்பிரே பயன்படுத்த முடிவு செய்திருப்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக காவல்துறைக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தகராறில் ஈடுபடுவோர் மீது பெப்பர் ஸ்பிரே - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
Published on

தகராறில் ஈடுபடுபவர்கள் மீது அடிப்பதற்காக பெங்களூரு நிறுவனத்திடம் இருந்து, சென்னை மாநகர காவல்துறை, 400 பெப்பர் ஸ்பிரே பாட்டில்கள் வாங்கியுள்ளதாகவும், சோதனை முறையில் அவற்றை அம்பத்தூர் வட்டத்திலுள்ள 15 காவல் நிலையங்களில் பயன்படுத்த இருப்பதாகவும் செய்தி வெளியானது.இந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினரான நீதிபதி ஜெயசந்திரன், பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தி தகராறில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்துவது குறித்த விளக்கத்தை, விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக டி.ஜி.பி., சென்னை மாநகர காவல் ஆணையர், அம்பத்தூர் துணை ஆணையர்.

X

Thanthi TV
www.thanthitv.com