CBSE | Education | 10ம் வகுப்புக்கு 2 பொதுத்தேர்வு நடத்திய CBSE - ரிசல்ட்டில் நடந்த அதிசயம்!
10ம் வகுப்புக்கு 2 பொதுத்தேர்வு நடத்திய CBSE - ரிசல்ட்டில் நடந்த அதிசயம்! சிபிஎஸ்இ முதன்முறையாக நடத்திய 10ஆம் வகுப்புக்கான இரண்டாவது பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றுத் தேர்வு முறையின் மூலம் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 96.78 சதவீதமாக உயர்ந்துள்ளது. தேர்வெழுதிய 6.63 லட்சம் மாணவர்களில், 5.13 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களின் மதிப்பெண்களை இன்னும் அதிகமாக்கிக் கொள்ள இந்தத் தேர்வை எழுதியுள்ளனர். கூடுதல் மதிப்பெண்களுக்காகத் தேர்வு எழுதிய மாணவர்களில் 59.95 சதவீதம் பேர், தங்களது முந்தைய மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். முதல் தேர்வில் சில பாடங்களில் தோல்வி அடைந்த 1.49 லட்சம் மாணவர்களில், பாதிக்கும் மேற்பட்டோர் அதாவது 52.40% பேர் இந்த இரண்டாவது வாய்ப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
