

பீகார் மாநிலம் மூசாஃபர்பூர் பூரணி பஜார் பகுதிய்ல, பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தில் கொள்ளை அடிக்க முயன்ற நிகழ்வை போலீசார் வெற்றிக்கரமாக முறியடித்துள்ளனர். மத்திய வங்கியில் இருந்து 88 லட்சம் ரூபாய் பணத்துடன் புறப்பட்ட வாகனத்தை, இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம ஆசாமிகள் தாக்கி கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதில் அந்த வாகனத்தின் பாதுகாவலர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்தார். அவர் பாதுகாப்புக்காக திருப்பி சுட்டதில், இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு போலீசாரும் வரவே அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.