ஷாருக்கான் மகள் மீது அதிர்ச்சி புகார்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் மகள் சுஹானா கான், நிலம் வாங்கிய விவகாரத்தில் உரிய அனுமதி பெறாமல் பரிவர்த்தனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மகாராஷ்டிரா அரசு விவசாயப் பயன்பாட்டிற்காக ஒதுக்கி வைத்திருந்த அலிபாக் கிராமத்தில் உள்ள நிலத்தை சுஹானா கான் வாங்கியதாக கூறப்படுகிறது. .
அவசியமான அனுமதிகளை பெறாமல் நிலத்தை அவர் வாங்கியதாக குற்றம்சாட்டப்படுகிறது. .
கடந்த 2023 மற்றும் 2024ஆம் ஆகிய இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 22 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு நிலப்பகுதிகளை அலிபாக் பகுதியில் அவர் வாங்கியதாகவும்,
நிலங்கள் தொடர்பான பதிவு ஆவணங்களில், சுஹானா தாம் ஒரு விவசாயி எனக் குறிப்பிடப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து முழுமையான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டப்படியான விதிமுறைகள் பின்பற்றி நிலம் மாற்றப்பட்டதா ? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது
