'சர்கார்' பட விவகாரம் : "கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதா?" - கமல் கருத்து

'சர்கார்' படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக இயக்குநர் முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு, நடிகர் கமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
'சர்கார்' பட விவகாரம் : "கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதா?" - கமல் கருத்து
Published on
'சர்கார்' படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக இயக்குநர் முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு, நடிகர் கமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், சர்கார் திரைப்படம் மத்திய தணிக்கை வாரியத்தால் தணிக்கை செய்யப்பட்டுள்ள நிலையிலும், கருத்து சுதந்திரத்தை அரசு ஒடுக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். இது ஜனநாயக முறையல்ல என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com