விஷயம் தெரிந்த உடனே ஸ்டேஷன் படியேறிய பிரபல நடிகை

x

பாலிவுட் நடிகை வித்யா பாலன் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கை பயன்படுத்தி, பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. தனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை பயன்படுத்தி ஒருவர் பணம் வசூலித்ததாக, மும்பை காவல்நிலையத்தில் நடிகை வித்யா பாலன் புகார் கொடுத்துள்ளார். அந்த நபர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக தெரிகிறது. நடிகை வித்யா பாலன் அளித்த புகாரின்பேரில், மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்