Aayirathil Oruvan 2 Update | ஆயிரத்தில் ஒருவன் 2 செல்வராகவன் கொடுத்த அப்டேட்

இயக்குநர் செல்வராகவன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களுக்கான அப்டேட்டை கொடுத்துள்ளார்.

தனியார் நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த அவர், புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தின் கதையை 50 சதவீதம் எழுதி முடித்துவிட்டேன்... ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கும் கதையை எழுதி வருகிறேன்... கதை திருப்தியாக இருந்தால் மட்டுமே படமாக எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், கார்த்தி, தனுஷ், இரண்டு பேரும் அடுத்த மூன்று வருடங்களுக்கு பிஸியாக உள்ளனர்... அவர்கள் இல்லாமல் இந்த படங்களை எடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com