கண்டெய்னர் லாரியை திருட்டு - ஜிபிஆர்எஸ் கருவியால் சிக்கிய இளைஞர்

x

ஈரோடு அருகே கண்டெய்னர் லாரியை திருடி சென்ற இளைஞரை, வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஆர்எஸ் கருவி மூலம் கண்டறிந்து போலீசார் கைது செய்தனர். சித்தோடு அருகே தனியார்

தொழிற்சாலையின் முன் பக்க கதவை உடைத்து ஆலைக்கு சொந்தமான கண்டைனர் லாரியை திருடிச்சென்றுள்ளனர். இது குறித்த புகாரைத்தொடர்ந்து, கண்டெய்னர் லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஆர்எஸ் கருவி மூலம் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கோவை மாவட்டம் கொடிசியா பகுதியில் கண்டெய்னர் லாரி நிறுத்தி வைக்கப்பட்டது தெரியவந்ததுள்ளது‌. அங்கு சென்ற போலீசார், லாரியை பறிமுதல் செய்து, அதை திருடிச்சென்ற ஓட்டுனரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்