கோயிலில் பாடல் போடுவதில் தகராறு - இளைஞர் வெட்டி கொலை. madurai | thirumangalam

x

திருமங்கலம் அருகே ஜாமினில் வெளியே வந்த இளைஞரை, வெட்டி படுகொலை செய்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா. கோயில் திருவிழாவில் பாடல் போடுவது தொடர்பாக பாரதிராஜாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த சந்தனபாண்டியன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்த பாரதிராஜா, திடீரென தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், வழக்கறிஞர் மூலம் ஜாமின் பெற்று பாரதிராஜா, சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். டீக்கடை ஒன்றில், நண்பர் சரவணக்குமார் உடன் பாரதிராஜா பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த கும்பல், பாரதிராஜாவை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. தடுக்க வந்த சரவணக்குமாரையும் வெட்டி தப்பித்து சென்றது. சம்பவ இடத்திலேயே பாரதிராஜா உயிரிழந்த நிலையில், காயமடைந்த சரவணக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக, சந்தனபாண்டியன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்