4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

x

கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை படகுகள் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. கடல் சீற்றம் அதிகரித்துள்ளதால் கடல் அலைகள் பல மீட்டர் உயரத்திற்கு எழும்புகின்றன. இதனிடையே, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படாததால், மழை அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்