திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றெடுத்த பெண்... மருத்துவமனையிலே விட்டுவிட்டு 'எஸ்கேப்' - பாதியில் வந்து பராமரித்த வேறு ஒரு குழந்தையின் தாய்

x

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த திருமணமாகாத 22 வயதுடைய பெண் ஒருவர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி பிரசவத்திற்காக சேர்ந்துள்ளார். அங்கு சுக பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், திடீரென, குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு தனது பாட்டியுடன் சேர்ந்து இளம்பெண் தலைமறைவானார். இதனால், தாய் இல்லாமல் தவித்து வந்த குழந்தையை, மற்றொரு குழந்தையின் தாய் மூலம் மருத்துவமனை நிர்வாகம் பராமரித்து வந்த‌து. இதையடுத்து, மருத்துவமனை தலைமை மருத்துவர் எழில் அளித்த தகவலின் அடிப்படையில், குழந்தையை தொட்டில் குழந்தை திட்டத்திற்கு சமூக நலத்துறையினர் அழைத்துச் சென்றனர். பெற்றெடுத்த குழந்தையை இளம்பெண் விட்டுச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்