கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானைகள்...வனத்துறை எடுத்த அதிரடி முடிவு - ஒரே ஓட்டமாக யானைகள் ஓடிய காட்சி

x

ஓசூர் அருகே மலை கிராமங்களில் சுற்றித்திரிந்த காட்டு யானைகளை, வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள நொகனூர் வனப்பகுதியில் இருந்து இரண்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி, அருகில் உள்ள கிராம பகுதிக்குள் நுழைந்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து, அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர், நீண்ட போராட்டத்திற்கு பின் பட்டாசுகளை வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்