சாய்பாபாவை குனிந்து வணங்கும்போதே.. பிரிந்த இளைஞர் உயிர் - நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி

x

மத்திய பிரதேச மாநிலம் கட்னியில் சாய்பாபாவை தரிசனம் செய்ய சென்ற இளைஞர் கோயிலுக்குள்ளேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாய்பாபாவின் உருவத்தை வணங்க குனிந்த அந்த இளைஞர் அதன் பிறகு நீண்ட நேரமாகியும் எழவே இல்லை எனவும், மக்கள் அருகில் சென்று பார்த்த போது, அவர் இறந்து கிடந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மாரடைப்பால் அந்த நபர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், சம்பவம் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்