ஆன்லைனில் வந்த Link-ஐ Click செய்ததும்.. காணாமல் போன பணம்

x

செல்போனுக்கு வந்த லிங்க் மூலம் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திய காவலாளியின், வங்கி கணக்கில் இருந்து ஒன்றே முக்கால் லட்ச ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.

புதுச்சேரி ஷன்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா சர்மா. ஜிப்மர் காவலாளியான இவரது செல்போனுக்கு ஆன்லைன் லிங்க் ஒன்று வந்துள்ளது. அதன் மூலம் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்த காவலாளி, வங்கி கணக்கில் இருந்து ஒன்றே முக்கால் லட்ச ரூபாய் பணம் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், திருடப்பட்ட பணம் ஜார்கண்ட்டில் உள்ள வங்கி கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதை கண்டுபிடித்தனர். அந்த வங்கி கணக்கை தீவிரமாக கண்காணித்து வந்த போலீசாருக்கு, அதன் உரிமையாளர் சென்னை வந்திருப்பது தெரியவந்தது. இதில், ஜார்கண்ட்டை சேர்ந்த அசாமுதின் அன்சாரி மற்றும் மகேஷ் குமார் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், 35 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இந்த மோசடியின் முக்கிய குற்றவாளியை ஜார்கண்ட் சென்று போலீசார் கைது செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்