"ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற போராடுவோம்" - மூத்த ஆசிரியர் சங்கத் தலைவர் மாயவன் அறிவிப்பு

x

ஆசிரியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க, மீண்டும் போராட்டங்களை கையில் எடுப்போம் என, மூத்த ஆசிரியர் சங்கத் தலைவர் மாயவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ஜாக்டோ ஜியோ மாநாட்டில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரம் செறிந்த போராட்டங்கள் மூலம் எவ்வளவு பெரிய எஃகு கோட்டைகளாக இருந்தாலும், இடித்து நொறுக்கி வெற்றிக் கனிகளைப் பறிக்க முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப, போராட்டங்களை கையில் எடுத்து வெற்றிகளை குவிப்போம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்