போதை இளைஞர்களை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்... குடியிருப்பு கதவை உடைக்க முயன்ற பரபரப்பு வீடியோ

x

விருத்தாசலத்தில், இளைஞர்கள் தகராறில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலடி சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில், மதுபோதையில் கூச்சலிட்ட இளைஞர்களை, சிவராமகிருஷ்ணன் என்பவர் தட்டிக் கேட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், தகராறில் ஈடுபட்டதுடன் குடியிருப்பு பகுதியின் நுழைவாயில் கதவை உடைக்க முயன்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரை கண்டதும், இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்