கட்டுக்கடங்காத கூட்டம் எதிரொலி.. சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு
சபரிமலையில், இன்று முதல் தரிசன நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பக்தர்கள் போலீசார் என 10 பேர் காயமடைந்தனர்.
நாள்தோறும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் வருகை தருவதால், கூட்டத்தை சமாளிப்பது மிகவும் சிரமமாக உள்ளது, பக்தர்களின் எண்ணிக்கையை 85 ஆயிரமாக குறைக்க வேண்டும் என போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், தரிசன நேரத்தை கோயில் நிர்வாகம் மாற்றியமைத்துள்ளது.
அதிகாலை 3 மணி முதல் மதியம் 1 மணி வரை இருந்த தரிசன நேரத்தை மதியம் 1.30 வரையும், மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை இருந்த தரிசன நேரத்தை, இரவு 11.30 மணி வரையும் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இன்று முதல் தரிசன நேரம் 19 மணி நேரமாக மாற்றப்படுகிறது.
Next Story