உரிமம் பெறாத துப்பாக்கிகள்... மத்திய, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

x
  • உரிமம் பெறாத துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கும் விவகாரம் தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • உரிமம் பெறாத துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிப்பது தொடர்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
  • அமெரிக்காவில் துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கு அந்நாட்டு அரசமைப்புச் சட்டம் உரிமை அளித்திருப்பது போல், உரிமம் பெறாமல் துப்பாக்கிகள் வைத்திருக்க தமது நாட்டில் உரிமம் இல்லை எனவும், உரிமம் பெறாத துப்பாக்கிகளின் பயன்பாடு மோசமான விளைவை ஏற்படுத்தும் எனவும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
  • இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்