தூங்கிக் கொண்டிருந்த சகோதரிகளின் செயின் பறிப்பு... திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம் - தொடர் கொள்ளை... பொதுமக்கள் அச்சம்

x
  • திருச்சி மணப்பாறை அருகே, பட்டப்பகலில் வீட்டில் இருந்த 15 சவரன் நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
  • கே.பெரியபட்டியை சேர்ந்த எலக்ட்ரீசியனான சிலம்பரசன் என்பவர், பொருட்கள் வாங்குவதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றார்.
  • அவரது மனைவி அமிர்தம், வீட்டை பூட்டி விட்டு சாவியை வெளியில் ஒரு பையில் தொங்கவிட்டு, மாடு மேய்க்கச் சென்றார்.
  • மதியம் வீட்டிற்கு வந்தபோது கதவு திறந்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.
  • இதேபோல், வடுகபட்டியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அக்காள் - தங்கையின் கழுத்தில் இருந்த 6 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
  • தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்