கால்பந்து மைதானத்தில் நடந்த சோகம்...கொட்டும் மழையில் கண்களை குளமாக்கும் இசை - 20 ஆயிரம் மெழுகுவர்த்தியுடன் குவிந்த மக்கள்

x

ஜெர்மனியில் உள்ள கால்பந்து மைதானத்தில் சுமார் 20 ஆயிரம் மெழுகுவர்த்திகளை ஏற்றி, கத்தார் கால்பந்து உலகக்கோப்பை ஏற்பாட்டுப் பணிகளின்போது உயிரிழந்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கத்தாரில் கால்பந்து மைதானங்களை அமைக்கும் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் ஏராளமானோர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்நிலையில், ஹெர்ன் நகரில் உள்ள மைதானத்தில் ஆயிரக்கணக்கான மெழுகுவர்த்திகளை ஏற்றி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், கால்பந்துகளில் மண்ணை நிரப்பியும் கத்தார் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்