தள்ளுவண்டி கடைக்காரரிடம் பணம் கேட்டு திருநங்கைகள் தகராறு... தர மறுத்த கடைக்காரரின் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல்...

x

திருப்பூர் மாவட்டத்தில் தள்ளுவண்டி வியாபாரியின் வீட்டின் முன்பு திருநங்கைகள் தகராறில் ஈடுபட்டு, தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பல்லடம், பெரியார் நகரில் வசித்து வருபவர் இசக்கி பாண்டி. இவர் அருகில் உள்ள என்ஜிஆர் சாலையில் தள்ளுவண்டி கடை வைத்திருக்கும் நிலையில், இரவு பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது, வழியில் திருநங்கைகள் பணம் கேட்டதாகவும், தர மறுத்த இசக்கி பாண்டியின் வீட்டின் மீது திருநங்கைகள் கற்களை வீசி, தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில், இசக்கி பாண்டியன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிய நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்