"எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகா"..கொடைக்கானலில் அலைமோதும் Tourists

x

கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம், இந்நிலையில் வாரத்தின் இறுதி நாளான இன்று தமிழகமட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது,பசுமை போர்த்திய‌ மலைமுகடுகளையும்,மலை முகடுகளின் இடையினில் தவிழ்ந்து செல்லும் மேக்கூட்டங்களை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர், மேலும் சுற்றுலா தலங்களில் நிலவும் இதமான கால நிலையினையும் அனுபவித்தவாறு மோயர் சதுக்கம்,பைன் மர சோலை,பில்லர் ராக்,குணா குகை,பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்து மகிழ்ந்து வருகின்றனர், மேலும் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் சுற்றுலாப்பயணிகள் மிதக்கும் நீறுற்றை கண்டு ரசித்து கொண்டே படகு சவாரி மேற்கொண்டு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து உற்சாகம் அடைந்து வருகின்றனர், இன்று சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தலங்கள் மற்றும் நகர்ப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது, இதன் காரணமாக சுற்றுலாப்பயணிகள் வாகனங்களில் காத்திருந்து ஊர்ந்தப்படி சென்று சுற்றுலா தல‌ங்களை காத்திருந்து கண்டு ரசித்து வருகின்றன‌ர், சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தொழில் புரிவோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதும் குறிப்பிட‌த்தக்க‌து.


Next Story

மேலும் செய்திகள்