இடி, சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்த்த மழை - சில்லென்று மாறிய தமிழகம் | Tamilnadu | Rain | Weather

x
  • திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.
  • ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கொடுத்து ஓடியது.
  • இருப்பினும், குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
  • கடலூர் மாவட்டம் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த சூழல் ஏற்பட்டுள்ளது, பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
  • அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
  • சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
  • உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது.
  • சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை கொட்டித்தீர்த்துள்ளது. இதனால், பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்