பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - அரசு பள்ளி ஆசிரியர் கைது!

x
  • திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
  • கூழமந்தல் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் ஆங்கில பாடப்பிரிவு பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
  • இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
  • இது குறித்து மாணவி பெற்றோரிடம் கூறியதை தொடர்ந்து, பெற்றோர்கள் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
  • அதன் பேரில் போலீசார் கூழமந்தல் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளிக்குச் சென்று விசாரணை செய்தனர்.
  • அப்போது ஆங்கில ஆசிரியர் முருகன் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது தெரியவந்தது.
  • இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆங்கில ஆசிரியர் முருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்