கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி....ஆங்காரமாக சீறி வந்த காளைகள்..

x

திருச்சி மாவட்டம் பொத்த மேட்டுப்பட்டியில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றது... புனித வியாகுல மாதா திடலில் ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் செல்வம் துவக்கி வைத்தார். ஆங்காரமாக சீறி வந்த காளைகளை, காளையர்கள் அடக்கி வெற்றி பெற்றனர்... பல காளைகள் வீரர்களைத் தூக்கி பந்தாடின... சுற்றுவட்டார பகுதி மக்கள் உற்சாகமாக ஜல்லிக்கட்டைக் கண்டு ரசித்தனர்...

ஜல்லிக்கட்டு போட்டியின் போது அனைவரையும் அலறியடித்து ஓட வைத்த காளையை, அதன் உரிமையாளரான வீரமங்கை ஒருவர், அதட்டி அழைத்துச் சென்ற காட்சி மெய்சிலிர்க்க வைத்தது...


Next Story

மேலும் செய்திகள்